தஞ்சையில் உள்ள சசிகலாவின் கணவர் நடராஜன் வீட்டிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள், உதவியாளர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் 150இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சை அருளானந்தநகரில் உள்ள சசிகலாவின் கணவர் நடராஜன் வீட்டிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.