மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர், மருத்துவர் வீடுகளிலும் வருமானவரித் துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது.
சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள், உதவியாளர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சுமார் 150க்கும் மேற்பட்ட இடங்களில் 8 மணிநேரத்துக்கும் மேலாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனின் அடையாறு வீடு, மருத்துவர் சிவக்குமாரின் நீலாங்கரை வீடு ஆகியவற்றிலும் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.