இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

அந்நியச் செலாவணி மோசடி வழக்கு: டிடிவி தினகரன் நேரில் ஆஜர்

அந்நியச் செலாவணி மோசடி வழக்கின் விசாரணைக்காக ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

Updated On :6 ஏப்ரல் 2018, 2:31 am IST

அந்நியச் செலாவணி மோசடி வழக்கின் விசாரணைக்காக ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
அந்தியச் செலாவணி மோசடி செய்ததாக, டிடிவி தினகரன் மீது கடந்த 1996 -ஆம் ஆண்டு அமலாக்கத் றை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை, சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் குறுக்கு விசாரணைக்கு டிடிவி தினகரன் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கின் விசாரணை நீதிபதி மலர்மதி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது டிடிவி தினகரன் நேரில் ஆஜரானார். அப்போது அமலாக்கத் துறை முன்னாள் அதிகாரி ஜானகிராமனிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை வரும் 11 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.