அந்நியச் செலாவணி மோசடி வழக்கின் விசாரணைக்காக ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
அந்தியச் செலாவணி மோசடி செய்ததாக, டிடிவி தினகரன் மீது கடந்த 1996 -ஆம் ஆண்டு அமலாக்கத் றை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை, சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் குறுக்கு விசாரணைக்கு டிடிவி தினகரன் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கின் விசாரணை நீதிபதி மலர்மதி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது டிடிவி தினகரன் நேரில் ஆஜரானார். அப்போது அமலாக்கத் துறை முன்னாள் அதிகாரி ஜானகிராமனிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை வரும் 11 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






