தில்லியில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவு: முதல்வர்16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர்! மே 30 முதல் தொடக்கம்!திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!
/

சிபிசிஐடி கூடுதல் டிஜிபியாக அமரேஷ் பூஜாரி நியமனம்

சிபிசிஐடி கூடுதல் டிஜிபியாக அமரேஷ் பூஜாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On :19 ஏப்ரல் 2018, 1:38 am IST

சிபிசிஐடி கூடுதல் டிஜிபியாக அமரேஷ் பூஜாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் ஐந்து ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்)
அமரேஷ் பூஜாரி---சிபிசிஐடி கூடுதல் டிஜிபி (கூடுதல் டிஜிபி குற்றப் பிரிவு)
கே.ஜெயந்த் முரளி---விழிப்புப்பணி மற்றும் ஊழல் தடுப்புத் துறை இயக்குநர் (சிபிசிஐடி கூடுதல் டிஜிபி)
எம்.என்.மஞ்சுநாதா---தொழில்நுட்பச் சேவைகள் பிரிவு கூடுதல் டிஜிபி (விழிப்புப் பணி மற்றும் ஊழல் தடுப்புத் துறை இயக்குநர்)
ஆபாஷ்குமார்---குற்றப் பிரிவு கூடுதல் டிஜிபி (தொழில்நுட்பச் சேவைகள் பிரிவு கூடுதல் டிஜிபி)
பி.விஜயகுமாரி---காவல் துறை துணைத் தலைவராக பதவி உயர்வு-சென்னை பெருநகர காவல் மேற்கு மண்டல இணை ஆணையாளர் (சென்னை பெருநகர காவல் நவீனமயமாக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையின் துணை ஆணையாளர்).
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.