திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் பட்டப்பகலில் வீடுபுகுந்து 50 பவுன் தங்க நகைகள், ரூ. 5.5 லட்சம் ரொக்கத்தைத் திருடிச் சென்றோரை போலீஸார் தேடிவருகின்றனர்.
சங்கரன்கோவிலிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள அம்மா நகரில் 25 -க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசித்து வரும் யாகப்பன் மகன் பாலமுருகன் (45), அப்பகுதியில் உள்ள தனியார் கோன் அட்டை தொழிற்சாலையில் உதவிப் பொதுமேலாளராக உள்ளார்.
அவர் செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் அலுவலகத்துக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினாராம். அப்போது வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 50 பவுன் தங்க நகைகள், ரூ. 5.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









