ஐபிஎல் தொடரில் அதிக முறை 50-க்கும் அதிகமாக ரன்கள் குவித்து ரோஹித் சர்மாவின் சாதனையை கே.எல்.ராகுல் சமன் செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் 40 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 30 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார்.
ரோஹித் சர்மாவின் சாதனை சமன்!
கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 60 ரன்கள் எடுத்தன் மூலம், ஐபிஎல் தொடரில் 51 முறை 50-க்கும் அதிகமான ரன்கள் குவித்துள்ள ரோஹித் சர்மாவின் சாதனையை கே.எல்.ராகுல் சமன் செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் அதிக முறை 50-க்கும் அதிகமான ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி 76 முறை 50 ரன்களுக்கும் அதிகமாக எடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் அதிக முறை 50+ ரன்கள் குவித்தவர்கள்
விராட் கோலி - 76 முறை
டேவிட் வார்னர் - 66 முறை
ஷிகர் தவான் - 53 முறை
கே.எல்.ராகுல் - 51 முறை
ரோஹித் சர்மா - 51 முறை
Summary
K.L. Rahul has equaled Rohit Sharma's record in the IPL by scoring 50-plus runs on the most occasions.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










