சென்னை: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்த போது அங்கே அமைச்சர்கள் இருந்தார்கள் என்று நான் கூறியதாக வெளியான தகவல்கள் தவறு என்று ராம மோகன ராவ் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு முன்னாள் தலைமைச் செயலர் ராம மோகன ராவ் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
விசாரணை ஆணையத்தில் ஆஜராவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ராம மோகன ராவ், ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்ட போது, ஒரு சில அமைச்சர்கள் அங்குதான் இருந்தார்கள் என்று விசாரணை ஆணையத்தில் நான் கூறியிருப்பதாக வெளியான தகவல்கள் தவறானது. நான் கூறியதாகச் சொல்லி தவறான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அன்றைய தினம், மாலை 6 மணிக்கு மேல் தான் நான் அங்கு வந்தேன். அப்போது தலைமைச் செயலராக இருந்ததால் ஏராளமான பணிகளில் ஈடுபட்டிருந்தேன். அதனால் மருத்துவமனைக்குச் செல்லவில்லை. மாரடைப்பு ஏற்பட்டபோது யார் யார் அங்கிருந்தார்கள் என்பதை நான் பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்

எண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



