திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வங்கிக்கு பூட்டுப் போட்டு சாலை மறியல்

லால்குடி அருகே, அதிகாரிகள் வராததால் கூட்டுறவு வங்கிக்கு பூட்டுப் போட்டு, திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற சாலை மறியலால் அப்பகுதியில் அரைமணி

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 7:52 pm

DIN

லால்குடி அருகே, அதிகாரிகள் வராததால் கூட்டுறவு வங்கிக்கு பூட்டுப் போட்டு, திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற சாலை மறியலால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கல்லக்குடியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நிர்வாகிகள் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை (ஏப்.30) நடைபெறுமென அறிவிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, அந்த வங்கியில் வேட்பு மனு தாக்கல் செய்ய அதிமுகவினரைத் தவிர திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வந்தனர். நீண்ட நேரமாகியும் வங்கி திறக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த லால்குடி தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் அ.சௌந்தரபாண்டியன் தலைமையில் 300 -க்கும் அதிகமானோர் வங்கிக்கு பூட்டுப் போட்டு, கல்லக்குடியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வேட்பு மனு தாக்கல் செய்யும் நாளில் வங்கியைத் திறக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் மறியல் கைவிடப்பட்டது. இதன்காரணமாக, திருச்சி -சிதம்பரம் சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.