
அண்ணா பல்கலைக்கழக தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் 593 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது.
இந்நிலையில் 2017 ஏப்ரல்/ மே மாதங்களில் நடந்த தேர்வுகளின் மறுமதிப்பீட்டிற்காக 3 லட்சத்து 2 ஆயிரத்து 38 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 73 ஆயிரத்து 733 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் மறுமதிப்பீட்டில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன.
மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் ஒரு விடைத்தாளுக்கு ரூ.10 ஆயிரம் வரை பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் பெற்றுள்ளனர். இதுபோன்ற முறைகேடுகளால் நேர்மையாகப் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பாதிக்கபட வாய்ப்புள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாக சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸார்அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒருசில பேராசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த முறைகேடு அண்ணா பல்கலைக்கழகத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளது.
எனவே சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வு விடைதாள் மறுமதிப்பீடு முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை சரியான கோணத்தில் செல்வதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து அரசு தரப்பு விளக்கத்தை ஏற்று கே.கே. ரமேஷின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





