‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

கண் மருத்துவத்தில் புதிய தொழில்நுட்பம்: டாக்டர்களுக்கு பயிற்சி

கண் மருத்துவத் துறையின் புதிய தொழில்நுட்பங்கள் குறித்த தொடர் கல்வி நிகழ்ச்சி கல்பவிருக்ஷô 18' டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் சார்பில் சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது.

அகர்வால் கண் மருத்துவமனையின் சார்பில் சென்னையில் வியாழக்கிழமை தொடங்கிய கண் மருத்துவம் குறித்த தொடர் கல்வி நிகழ்ச்சியில், சிறந்த மாணவி சஜிதா பிரவீணுக்கு தங்கப் பதக்கமும் சான்றிதழும் வழங்கிய அமைச்சர் 

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST


கண் மருத்துவத் துறையின் புதிய தொழில்நுட்பங்கள் குறித்த தொடர் கல்வி நிகழ்ச்சி கல்பவிருக்ஷô 18' டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் சார்பில் சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது.
நிகழ்ச்சியை தமிழக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சி தொடர்பாக மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் அமர் அகர்வால் கூறியது: இந்தியாவில் 1.80 கோடி பேருக்கு பார்வைத்திறன் இழப்பு உள்ளது. இவர்களில் 55 சதவீதம் பேருக்கு கண்புரையால் பார்வையிழப்பு ஏற்பட்டுள்ளது. கண் மருத்துவத் துறையில் உள்ள நவீன தொழில்நுட்பங்கள், புதிய உத்திகளை இன்றைய இளம் கண் மருத்துவர்களுக்கு எடுத்துக் கூறுவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
நாடு முழுவதிலுமிருந்து 200-க்கும் மேற்பட்ட கண் மருத்துவ நிபுணர்கள், கண் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பலன் அடைய உள்ளனர் என்றார் அவர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நேரலை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும் நவீன சிகிச்சைகள் தொடர்பான விவாதங்கள், கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கண் மருத்துவ சிகிச்சைகளை சிறப்பாக மேற்கொண்டோருக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.