தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.பஷீர் அகமது ஓய்வு பெற்றார்

உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.பஷீர் அகமது திங்கள்கிழமையுடன் ஓய்வு பெற்றார்

Updated On :21 ஆகஸ்ட் 2018, 1:49 am IST


உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.பஷீர் அகமது திங்கள்கிழமையுடன் ஓய்வு பெற்றார்.
கடந்த 1956-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகில் உள்ள சிங்கம்பத்து கிராமத்தில் பிறந்தவர் நீதிபதி ஏ.எம்.பஷீர் அகமது. பள்ளிப் படிப்பை களக்காடு பகுதியிலும், பட்டப்படிப்பை திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியிலும் படித்தவர். மதுரை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்த அவர், கடந்த 1981-ஆம் ஆண்டு வழக்குரைஞராகப் பதிவு செய்தார். கடந்த 1988-ஆம் ஆண்டு சிவில் நீதிபதியாக தேர்வான அவர், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நீதிபதியாக பணியாற்றினார். 
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பதவி வகித்த அவர், திங்கள்கிழமையுடன் ஓய்வு பெற்றார். அவருக்கு பணி நிறைவு விழா சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. 
இந்த விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், அரசு தலைமை வழக்குரைஞர், கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர், அரசு வழக்குரைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். நீதிபதி ஏ.எம்.பஷீர் அகமது ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 62 - ஆகக் குறைந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.