மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தமிழகத்தில் மூத்த ஐ.ஏ .எஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் 'திடீர்' இடமாற்றம் 

தமிழகத்தில் மூத்த ஐ.ஏ .எஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களை 'திடீர்' இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

News image
Updated On :23 ஆகஸ்ட் 2018, 1:28 pm

சென்னை: தமிழகத்தில் மூத்த ஐ.ஏ .எஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களை 'திடீர்' இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் மூத்த ஐ.ஏ .எஸ் அதிகாரிகள் மற்றும் ஆறு மாவட்ட ஆட்சியர்களை 'திடீர்' இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான தலைமைச் செயலாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: 

தமிழக அரசின் உயர் கல்வித் துறை செயலாளராக இருந்த சுனில் பாலிவால் தற்பொழுது தொழிலாளர்  நலம் மற்றும் வேலை வாய்ப்பு துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.  

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையில் பாட நூல் வடிவமைப்பு பிரிவில் செயல்பட்டு வந்த உதயசந்திரன் தற்பொழுது தொல்லியல் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் அசோக் டாங்ரே தற்பொழுது குடிநீர் வடிகால் வாரியத் துரையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநராட்சி ஆணையர் கார்த்திகேயன் தற்பொழுது கூடுதல் பொறுப்பாக ஊரக வளர்ச்சி மற்றும் நிதி ஒதுக்கீடு துறையினையும் கவனிக்க உள்ளார். இது போல பல முக்கிய துறை செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

இதேபோல மதுரை, ஈரோடு மற்றும் கோவை உள்ளிட்ட ஆறு மாவட்ட ஆட்சித் தலைவர்களையும் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.