பரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

கட்சியில் இணைத்துக்கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்கத் தயார்: மு.க. அழகிரி

கட்சியில் இணைத்துக்கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்கத் தயார் என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். 

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

கட்சியில் இணைத்துக்கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்கத் தயார் என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். 

மு.க. அழகிரி வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து கருணாநிதியின் நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடத்த உள்ளார். இதில் ஒரு லட்சம் பேர் வரை திரட்டிக் காட்டுவதற்கான நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் 7ஆவது நாளாக இன்றும் மதுரையில் ஆலோசனை மேற்கொண்டார். 

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
கட்சியில் எங்களை சேர்த்துக்கொண்டால் இணைந்து பணியாற்ற தயார். கட்சியில் சேர்த்துககொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளதானே வேண்டும். பொதுக்குழு மட்டுமே திமுக அல்ல, பொதுக்குழுவில் 1,500 பேர் மட்டுமே உள்ளனர். கட்சியைக் காப்பாற்றவே திமுகவில் இணைய விரும்புகிறேன். 

துரை தயாநிதிக்கு கட்சியில் எந்த பதவியும் கேட்கவில்லை. தனக்கும், தயாநிதிக்கும் அந்த ஆசையில்லை. செப்டம்பர் 5ஆம் தேதி நடக்கும் அமைதி பேரணியில் ஒரு லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள். பேரணி நடத்துவதற்கு ஆளுங்கட்சி தரப்பில் எங்களுக்கு நெருக்கடி ஏதுமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.