‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

ரூ.24 ஆயிரம் லஞ்சம்:  கிருஷ்ணகிரி தொழிலாளர் துணை ஆய்வாளர் கைது

ரூ.24 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கிருஷ்ணகிரி தொழிலாளர்  துணை ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

ஒசூர்: ரூ.24 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கிருஷ்ணகிரி தொழிலாளர்  துணை ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி தொழிலாளர் துறையில் துணை ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் ராமு (55). இவர் சூளகிரி பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் அளவீட்டு கருவிகளை ஆய்வு செய்து, "சீல்' வைப்பதற்காக சென்றார். அப்போது, அங்குள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் அதற்கான கட்டணத் தொகையை வசூலித்ததுடன் லஞ்சமாக ரூ.24 ஆயிரம் கேட்டாராம்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத பெட்ரோல் விற்பனை நிலைய நிர்வாகத்தினர், இது தொடர்பாக கிருஷ்ணகிரியில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார் செய்தனர்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஆலோசனைப்படி, ரசாயனப் பொடி தடவப்பட்ட ரூ.24 ஆயிரத்துக்கான நோட்டுகளை ராமுவிடம் கொடுப்பதற்காக அங்குள்ள உணவகத்துக்கு பெட்ரோல் விற்பனை நிலைய நிர்வாகத்தினர் வரச் சொன்னார்களாம்.
அதன்படி, ராமு வியாழக்கிழமை இரவு சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு உணவுகத்துக்குச் சென்று பணத்தைப் பெறும் போது,  அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் ராமுவை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.