சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

நீட் தேர்வில் சிபிஎஸ்இ துரோகத்தை செய்துவிட்டு, மாணவர்களை குற்றம்சாட்டுவது ஆணவத்தின் உச்சம் - ஸ்டாலின் கண்டனம்

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழில் எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். 

News image
Updated On :30 ஆகஸ்ட் 2018, 4:10 pm

DIN

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழில் எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். 

நீட் தேர்வில் மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட்ட உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பிக்கையில், "நீட் தேர்வு வினாத்தாள் குளறுபடியின் காரணமாக மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட இயலாது. தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு இம்முறை நிவாரணம் எதுவும் அளிக்க வாய்ப்பு கிடையாது. நீட் தேர்வுக்கும், மருத்துவப் படிப்புக்கும் ஆங்கிலம்தான் மிகவும் முக்கியம் என்னும் பட்சத்தில், மாணவர்களுக்கு மாநில மொழியில் தேர்வு நடத்துவது எதனால்? இவற்றை சரி செய்ய வேண்டும்" என்று கூறியது. 

மேலும், இந்த வழக்கினை செப்டம்பர் 26-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் சுட்டுரையில் கருத்து தெரிவித்துள்ளார்.   

அதில், "தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. 

இதற்கு முழுக்காரணம் சிபிஎஸ்இ மட்டுமே! துரோகத்தை செய்துவிட்டு மாணவர்களை குற்றஞ்சாட்டுவது ஆணவத்தின் உச்சம்! தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வெழுத தேர்வு மையங்கள் ஒதுக்கியதில் பிரச்சினை! கேள்வித்தாள் மொழிபெயர்ப்பில் குளறுபடிகளை செய்தது என நம் மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கிய சிபிஎஸ்இ தலைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரை வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.