தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பேருந்து நிலையங்கள், கல்வி நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு செய்யப்பட்ட ஏற்பாடுகள் என்ன?

பேருந்து நிலையங்கள், கல்வி நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு செய்யப்பட்ட ஏற்பாடுகள் என்ன? என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

News image
Updated On :5 டிசம்பர் 2018, 8:57 am

DIN

சென்னை: பேருந்து நிலையங்கள், கல்வி நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு செய்யப்பட்ட ஏற்பாடுகள் என்ன? என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

பேருந்து நிலையங்கள், கல்வி நிலையங்கள் போன்ற பொது இடங்களில் பிறரைப் போலவே மாற்றுத் திறனாளிகளும் சரிசமமாக பயன்படுத்த வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். அவர்களுக்கான இயங்கு தளமானது உறுதி செய்யப்பட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. 

இந்த மனுவானது புதனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேருந்து நிலையங்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு செய்யப்பட்ட ஏற்பாடுகள் என்ன? என்பது குறித்து தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

அத்துடன் இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.