மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்டெர்லைட் வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவிப்பு 

ஸ்டெர்லைட் வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. 

News image
Updated On :10 டிசம்பர் 2018, 9:58 am

DIN

புது தில்லி: ஸ்டெர்லைட் வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. 

தூத்துக்குடி ஸ்டெர்லை ஆலைக்கு எதிராக நடந்த பொதுமக்கள் போராட்டத்தின் காரணமாக நடந்த காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானர்கள். அதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. 

அதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக் கோரியும், தமிழக அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரியும் வேதாந்தா குழுமம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நடந்து வந்தது. 

ஆலை மூடப்பட்டது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு   செய்து தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தாக்கல் செய்த அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்து பிறப்பித்த உத்தரவு இயற்கை நீதிக் கொள்கைகளுக்கு எதிராக உள்ளது. வேதாந்தா குழுமத்துக்கு நோட்டீஸ் அளிக்கப்படவில்லை. மேலும், அவர்களது கருத்தைக் கேட்க வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. 

ஆலையை நிரந்தரமாக மூடுவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ள காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. வேதாந்தா குழுமம் விதிமுறைகளை மீறியிருப்பது கண்டறியப்பட்டிருந்தாலும், ஆலையை மூடுவதற்காக தெரிவிக்கப்பட்டுள்ள காரணங்கள் நியாயப்படுத்தும் வகையில் இல்லை. ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க பசுமைத் தீர்ப்பாயம் கருதுவதாக இருந்தால் விதிமுறைகளுடன் அனுமதி அளிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. 

இந்நிலையில் ஸ்டெர்லைட் வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்பாயம் அறிவித்துள்ளது. 

இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்பாயத் தலைவர் ஏ.கே. கோயல் அறிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.