தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திமுகவில் ஐக்கியமானார் செந்தில் பாலாஜி

திமுகவில் இருந்து பிரிந்து சென்று சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கட்சியில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.

News image
Updated On :30 ஜனவரி 2024, 11:23 pm IST


சென்னை: திமுகவில் இருந்து பிரிந்து சென்று சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கட்சியில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.

அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவுக்கு மாறினார். இன்று அங்கிருந்து விலகிய அவர், தனது ஆதரவாளர்களுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் துரைமுருகன், டி.ஆர். பாலு, ஆர். ராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதனை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர். பட்டாசுகள் வெடித்து தொண்டர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வந்தார். 

அமமுகவுடன் இணைந்து செயல்பட்டதால் பேரவைத் தலைவர் தனபாலால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர். இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றமும் தீர்ப்பு கூறியது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரனை செந்தில்பாலாஜி வலியுறுத்தி வந்துள்ளார். அதை டிடிவி தினகரன் ஏற்கவில்லை எனத் தெரிகிறது. இதனால், அமமுகவிலிருந்து விலகும் முடிவை செந்தில்பாலாஜி எடுத்துள்ளார்.

மேலும், கரூரைச் சேர்ந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் மோதல் உள்ளதால், மீண்டும் அதிமுகவுக்குச் செல்ல முடியாத நிலையில் செந்தில்பாலாஜி இருந்து வருகிறார்.

இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை காலை 12 மணியளவில் தனது ஆதரவாளர்களுடன் செந்தில் பாலாஜி இணைந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.