மசூலிப்பட்டினம் -காக்கி நாடா இடையே நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் 'பெய்ட்டி' புயல் 

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் 'பெய்ட்டி' புயலானது, மசூலிப்பட்டினம் -காக்கி நாடா இடையே திங்கள் பிற்பகல் கரையைக் கடக்கும்  என்று வானிலைஆய்வுமையம் தெரிவித்துள்ளது.  
மசூலிப்பட்டினம் -காக்கி நாடா இடையே நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் 'பெய்ட்டி' புயல் 
Published on
Updated on
1 min read

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் 'பெய்ட்டி' புயலானது, மசூலிப்பட்டினம் -காக்கி நாடா இடையே திங்கள் பிற்பகல் கரையைக் கடக்கும்  என்று வானிலைஆய்வுமையம் தெரிவித்துள்ளது.   

இதுதொடர்பாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவல் பின்வருமாறு: 

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது,  புயலாக உருமாறியுள்ளது. 'பெய்ட்டி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயலானது, தற்போது சென்னையில்  இருந்து 510 கி.மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. 
 
சரியாக மசூலிப்பட்டினத்தில் இருந்து தென் கிழக்கே 670 கி.மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ள 'பெய்ட்டி' புயலானது, மசூலிப்பட்டினம் - காக்கி நாடா இடையே திங்கள் பிற்பகல் கரையக் கடக்கும். 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com