சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்ஸின் சகோதரர் ராஜா, மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவதாக ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கட்சியின் கொள்கைக்கு முரணாகவும் குறிக்கோளுக்கு விரோதமாகவும் நடந்து கொண்டதாலும், கட்சிக்கு அவப்பெயர் மற்றும் களங்கம் உண்டாகும் வகையிலான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டதாலும், ஓ. ராஜா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட்ட அனைத்து பொறுப்புகளிலும் நீக்கப்படுகிறார் என்று கடந்த 19-ஆம் தேதி அன்று ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரின் பெயரில் கூட்டறிக்கை வெளியானது. .
இந்நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்ஸின் சகோதரர் ராஜா, மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவதாக ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் மீண்டும் ராஜா கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.