மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஹெச்ஐவி ரத்தம் அளித்த இளைஞர் விஷம் அருந்தி பலி: சாவில் மர்மம் என தந்தை புகார்  

கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்ஐவி தொற்று உள்ள ரத்தம் அளித்த விவகாரத்தில் விஷம் அருந்திய பலியான இளைஞரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக தந்தை புகார் அளித்துள்ளார். 

News image
Updated On :30 டிசம்பர் 2018, 9:24 am

DIN

மதுரை: கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்ஐவி தொற்று உள்ள ரத்தம் அளித்த விவகாரத்தில் விஷம் அருந்திய பலியான இளைஞரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக தந்தை புகார் அளித்துள்ளார். 

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு, ஹெச்ஐவி தொற்று உள்ள ரத்தம் ஏற்றப்பட்டது.

 இதனால் பாதிக்கப்பட்டுள்ள அவர், உயர் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு, 9 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

பாதிக்கப்பட்ட கர்ப்பிணி குடும்பத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கு தமிழக அரசால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் வேளையில்,  கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி தொற்றின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தவும், வயிற்றில் உள்ள குழந்தைக்கு தொற்று ஏற்படாமல் தடுக்கவும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

அதேசமயம் கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் அளித்த விவகாரத்தில் விஷம் அருந்திய இளைஞர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலே ஞாயிறு காலை  உயிரிழந்தார்.   

இந்நிலையில் இளைஞரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை புகார் அளித்துள்ளார்.  

இதுபற்றி போலீசில் அவர் புகார் ஒன்றை அளித்து உள்ளார். அந்த புகாரில் மகனின் உடற்கூறு ஆய்வை மதுரை மருத்துவர்களை தவிர்த்து பிற மருத்துவர்களை வைத்து நடத்த வேண்டும் என்றும், உடற்கூறு ஆய்வை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும்  கோரியுள்ளார்.  

இதுபற்றி மருத்துவமனை டீனிடமும் அவர் தனியாக மனு அளித்து உள்ளதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.