6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சேலம் உருக்காலை பங்கு விலக்கலுக்கு மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல்: மக்களவையில் தகவல்

சேலம் உருக்காலையின் உத்திசார் பங்குவிலக்கல் நடவடிக்கைக்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 7:55 pm

DIN

சேலம் உருக்காலையின் உத்திசார் பங்குவிலக்கல் நடவடிக்கைக்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய உருக்குத் துறை இணையமைச்சர் விஷ்ணு தியோ சாய் தெரிவித்தார்.
இது தொடர்பாக மக்களவை அதிமுக உறுப்பினர்கள் வி.சத்யபாமா, பி.ஆர். செந்தில்நாதன், ஆர்.கே.பாரதிமோகன் ஆகியோர், 'இந்திய உருக்கு ஆணையத்தின் (செயில்) கீழ் செயல்படும் உருக்கு நிறுவனங்களை மேம்படுத்தவும், பன்மைப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா? மேலும், இத்துறையில் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதா?' என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு மத்திய உருக்குத் துறை இணையமைச்சர் விஷ்ணு தியோ சாய் மக்களவையில் திங்கள்கிழமை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் தெரிவித்திருப்பதாவது:
இந்திய உருக்கு ஆணையத்தின் (செயில்) துர்க்காபூர், அலாய் உருக்கு ஆலை, சேலம் உருக்கு ஆலை, விஷ்வேஸ்வரய்யா உருக்கு ஆலை (விஐஎஸ்பி) ஆகியவற்றில் உத்திசார் பங்குவிலக்கல் நடவடிக்கை மேற்கொள்வதற்காக மத்திய அரசு கொள்கை அளவிலான ஒப்புதலை அளித்துள்ளது. 
இந்த ஆலைகளின் வளர்ச்சி, வணிக வாய்ப்புகளின் அதிகபட்ச வளர்ச்சிக்கான நிதி, புதிய மேலாண்மை செயல்பாடுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பன்மைப்படுத்துதல் திட்டத்தின் கீழ் செயில் நிறுவனமும், ஆர்சிலர் மிட்டல் நிறுவனமும் இந்தியாவில் கூட்டாக இணைந்து ஒரு தானியங்கி உருக்கு உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பதற்கான வாய்ப்புகளை ஆராய்வதற்காக 2015, மே 22-ஆம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. 
இந்தியாவில் இரும்புத்தாது மற்றும் பதப்படுத்தப்பட்ட உருக்கு ஆகியவற்றுக்கான பற்றாக்குறை இல்லை என்று அமைச்சர் விஷ்ணு தியோ சாய் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.