மதுரை விமான நிலையத்தில் புராதன விநாயகர் சிலை பறிமுதல்
மதுரை விமான நிலையத்தில் இருந்து திங்கள்கிழமை வெளிநாட்டுக்கு புராதன விநாயகர் சிலையை கடத்திச் செல்ல முயன்ற வெளிநாட்டினர் இருவரிடம் சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி


மதுரை விமான நிலையத்தில் இருந்து திங்கள்கிழமை வெளிநாட்டுக்கு புராதன விநாயகர் சிலையை கடத்திச் செல்ல முயன்ற வெளிநாட்டினர் இருவரிடம் சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை விமான நிலையத்தில் இருந்து இலங்கை செல்லும் விமானத்தில் பயணம் செய்ய இருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பேப்ரி (60), பிரா லீ மீவல் (74) ஆகியோரின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அவர்கள் உலோகத்தாலான 4.8 கிலோ எடையுள்ள 1 அடி உயர விநாயகர் சிலை வைத்திருப்பது தெரிந்தது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்தபோது, கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கடையில் சிலையை வாங்கியதாகத் தெரிவித்தனர். மத்திய சுங்க நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனையில் அது புராதன சிலை என தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள், வெளிநாட்டினர் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...