சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சென்னையில் ரூ.1000 பஸ் பாஸ் கட்டணத்தில் மாற்றம் இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு!

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் அளிக்கப்பட்டு வரும் மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் மாற்றமின்றி ரூ.1000 ஆகத் தொடரும் என்று போக்குவரத்து துறைஅமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

News image
Updated On :6 பிப்ரவரி 2018, 12:04 pm

DIN

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் அளிக்கப்பட்டு வரும் மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் மாற்றமின்றி ரூ.1000 ஆகத் தொடரும் என்று போக்குவரத்து துறைஅமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

தமிழக அரசு கடந்த 20ம் தேதி மாநிலம் முழுவதும் பேருந்து கட்டணத்தை மாற்றியமைத்த பிறகு, சென்னையில் ஒரு நாள் பயணச்சீட்டு பாஸ் கட்டணம் நிர்ணயிக்கப்படாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

அதே போல ஒரு நாள் பயண அட்டை கட்டணம் ரூ.50-இல் இருந்து ரூ.80 ஆகவும், மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் ரூ.1,000ல் இருந்து ரூ.1,300 ஆகவும் உயர உள்ளதாக தகவல்கள் வெளியாகின   

இந்நிலையில் மாநில போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செவ்வாயன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் அளிக்கப்பட்டு வரும் மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் மாற்றமின்றி ரூ.1000 ஆகத் தொடரும்.

அதேநேரம் சென்னையில் ஒரு நாள் பயணச்சீட்டு பாஸ் கட்டணத்தினை உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது 

ரூ.240 ஆக உள்ள மாதாந்திர பஸ் பாஸ் பயணக் கட்டணம் மட்டும் தற்பொழுது ரூ.320 ஆக உயர்த்தப்பட்டுள்ளது

பேரூந்து கட்டன உயர்வுக்குப் பிறகு பேருந்துகளில் பயணிப் போரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.

தற்பொழுது புதிதாக 2000 பேருந்துகள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.