எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருநள்ளாற்றில் நாட்டியாஞ்சலி :பத்மா சுப்ரமணியனுக்குப் பாராட்டு

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி நடைபெறும் நாட்டியாஞ்சலியில், புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் டாக்டர் பத்மா சுப்ரமணியனுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுத் தெரிவித்தார்.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 11:18 pm

DIN

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி நடைபெறும் நாட்டியாஞ்சலியில், புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் டாக்டர் பத்மா சுப்ரமணியனுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுத் தெரிவித்தார்.
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியையொட்டி நாட்டியாஞ்சலி விழா நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு 13 -ஆம் ஆண்டாக, 6 நாள்கள் நடைபெறும் வகையில் கோயில் வளாகத்தில் உள்ள கெய்தான் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சிகள் தொடங்கின.
ஒவ்வொரு நாளும் உலகின் பல நாடுகளிலும், இந்தியாவிலும் புகழ்பெற்று விளங்கும் நடனக் கலைஞர்கள் பங்கேற்று நடனமாடுகின்றனர். 
3 -ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை புகழ்பெற்ற நடனக் கலைஞரும், கலைமாமணியுமான டாக்டர் பத்மா சுப்ரமணியன் நடனம் அரங்கேறியது. இந்த நிகழ்ச்சியின் நிறைவில் மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன், பத்மாசுப்ரமணியனுக்கு சால்வை அணிவித்துப் பாராட்டுத் தெரிவித்தார். 
காரைக்கால் மாவட்ட கலைஞர்கள் மாமன்ற நிர்வாகிகள் த. தங்கவேலு, டி. மோகன், பி. புஷ்பராஜ், சித்ரா கோபிநாத் ஆகியோர் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த நடனக் கலைஞர்கள் பரதநாட்டியமாடினர். 4-ஆம் நாளான திங்கள்கிழமை குச்சிப்புடி உள்ளிட்ட நடனங்கள் அரங்கேறின.
மகா சிவராத்திரி நாளான செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் புதன்கிழமை அதிகாலை 3.55 மணி வரை தொடர்ந்து நடன நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. நிறைவு நாளான 14 -ஆம் தேதி காரைக்கால் பகுதியைச் சேர்ந்த பல்வேறு நடனக் குழுவினர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.