பிப். 21 முதல் சென்னையில் தொடர் போராட்டம்: ஜாக்டோ -ஜியோ அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 21 -ஆம் தேதி முதல் சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
Updated on
1 min read

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 21 -ஆம் தேதி முதல் சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஜாக்டோ - ஜியோ சார்பில் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான கூட்டம் சிவகங்கையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும். 
தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தியக் குழுவில் வழங்க வேண்டிய 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் மேற்கண்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 21 -ஆம் தேதி, சென்னையில் தொடர் மறியல் போராட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com