எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பேருந்துக் கட்டண உயர்வு: திமுக கூட்டணி இன்று கண்டன பொதுக் கூட்டம்

பேருந்து கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் செவ்வாய்க்கிழமை (பிப்.13) கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 7:51 pm

DIN

பேருந்து கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் செவ்வாய்க்கிழமை (பிப்.13) கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
திருவள்ளூரில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும், தென்சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசரும், மதுரையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் கண்டன பொதுக் கூட்டங்களில் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் விழுப்புரத்திலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் காஞ்சிபுரத்திலும் கண்டன பொதுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளனர். மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் கூட்டங்களில் திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.