ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

முன்னாள் துணைவேந்தர் கணபதி ஜாமீன் மனு 2ஆவது முறையாக தள்ளுபடி

லஞ்ச வழக்கில் கைதான பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆ.கணபதி, பேராசிரியர் எம்.தர்மராஜ் ஆகியோரின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளபடி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 6:09 am

DIN

லஞ்ச வழக்கில் கைதான பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆ.கணபதி, பேராசிரியர் எம்.தர்மராஜ் ஆகியோரின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளபடி செய்யப்பட்டுள்ளது. 

பேராசிரியர் பணிக்காக சுரேஷ் என்பவரிடம் ரூ. 30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கடந்த சில நாள்களுக்கு முன்னர் லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இதனிடையே லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகி இடைநீக்கம் செய்யப்பட்ட துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் இருவரும் ஜாமீன் கோரி கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் மீண்டும் மனுதாக்கல் செய்தனர். இந்நிலையில் இருவரது ஜாமீன் மனுவையும் கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.