சென்னை: அதிமுகவுக்கு என தனியாக செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி விரைவில் உதயமாக உள்ளதாக அதிமுகவினை வழி நடத்தும் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுக எம்.எள்.ஏக்களின் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுகவினை வழி நடத்தும் குழு ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் பேசிய முதல்வர் பழனிசாமி கூறியதாவது:
அதிமுகவுக்கு என தனியாக செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி விரைவில் உதயமாக உள்ளது. அதற்கான அடிப்படைப் பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
ஜெயா டிவி மற்றும் நமது எம்ஜிஆர் நாளிதழ் ஆகிய இரண்டும் தற்பொழுது டிடிவி தினகரன் வசம் உள்ளதால் அதிமுகவுக்கென தனியாக ஒரு செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி துவங்க வேண்டிய கட்டாயத்துக்கு முதல்வர் தரப்பு தள்ளப்பட்டு உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!
ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! எஃப்-35-ஐவிட இரு மடங்கு விலை அதிகமா?

விதிமீறல்! விஜய் மீது வழக்குப் பதிவு!

ஊழல் செய்த திமுக அமைச்சா்கள் மீது நடவடிக்கை: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


