மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

நிதி வசதியை ஏற்படுத்த முடியாவிட்டால் ஆட்சியை விட்டுப் போகலாம்: அரசுக்கு தொழிற்சங்கங்கள் கண்டனம்! 

போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதியத்துக்கு நிதி வசதியை ஏற்படுத்த முடியாவிட்டால் ஆட்சியை விட்டுப் போகலாம் என அரசுக்கு தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

News image
Updated On :5 ஜனவரி 2018, 8:21 pm IST

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதியத்துக்கு நிதி வசதியை ஏற்படுத்த முடியாவிட்டால் ஆட்சியை விட்டுப் போகலாம் என அரசுக்கு தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதியத்துக்கு நிதி வசதியை ஏற்படுத்த முடியாவிட்டால் ஆட்சியை விட்டுப் போகலாம் என சிஐடியூவின் சவுந்தரராஜன், தொமுசவின் சன்முகம் இருவரும் கூட்டாக அறிவித்தனர். இது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டையில் அவர்கள் இருவரும் கூட்டாக செய்தியார்களிடம் கூறியதாவது:

எங்கள் பிரச்சனை தீரும்வரை போராட்டம் தொடரும். அரசின் நடவடிக்கைகளுக்கு அஞ்ச மாட்டோம்.  நீதிமன்றத்திலிருந்து எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை. எங்களது தரப்பை கேட்காமலே பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவானது இயற்கை நீதிக்கு எதிரானது.  அப்படியே உத்தரவு வந்தாலும் திங்களன்று  உயர்நீதிமன்றத்தில் எங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்து வாதாடுவோம்.

போக்குவரத்து கழங்கங்கள் நிதி நெருக்கடியில் இருப்பதாக தொடர்ந்து கூறுகிறார்கள். போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதியத்துக்கு நிதி வசதியை ஏற்படுத்த முடியாவிட்டால் இந்த அரசு ஆட்சியை விட்டுப் போகலாம்

பொதுமக்களின் சிரமங்களுக்கு நாங்களும் வருந்துகிறோம். தவிர்க்கவியலா இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அரசுதான் காரணம்; நாங்கள் அல்ல கோரிக்கைகள் நிறைவேறும் வரை பொறுமையாக காத்திருக்கிறோம். எது வந்தாலும் சட்ட ரீதியாக சந்திப்போம்.

இவ்வாறு அவர்கள் இருவரும் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.