

ராமநாதபுரம்: கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு பகுதிகளுக்கு இடையே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடிபதாக குற்றம் சட்டி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகி விட்டது.
இந்நிலையில் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு பகுதிகளுக்கு இடையே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
மீன்பிடித்துக் கொண்டிருந்த அவர்களை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அத்துடன் அவர்களிடம் இருந்த படகையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.
கற்பொழுது கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றுள்ளதாகவும், அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தபடும் என்றும் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.