திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸார் தடை விதித்தனர்.
குற்றாலம் மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த தொடர்மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, பேரருவியில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது. திங்கள்கிழமை காலையில் வெள்ளம் சற்று குறைந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால், மீண்டும் மாலை முதல் பெய்த தொடர் சாரல் மழை காரணமாக பேரருவியில் தண்ணீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து, பேரருவியின் மையப் பகுதிக்குள் சென்று யாரும் குளிக்காதவண்ணம் ஆண்கள், பெண்கள் பகுதியில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இரவில் தண்ணீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து பேரருவியில் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் சீறிப்பாய்ந்தது. இதனால், பேரருவியில் குளிக்க போலீஸார் தடை விதித்தனர். ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது
போதைப்பொருள்களை விற்பனை செய்த வழக்கில் 10 போ் கைது

திமுக கூட்டணி கட்சியினா் வாக்கு சேகரிப்பு

சாத்தூரில் சமுதாய தலைவா்களை சந்தித்து நயினாா் நாகேந்திரன் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

