மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ரத்த தானம் அளிக்கச் சென்ற இளைஞரின் சிறுநீரகம் திருட்டு: விசாரணை நடத்த எஸ்.பி., உத்தரவு

மதுரையில் ரத்த தானம் அளிக்கச் சென்ற இளைஞரிடம் சிறுநீரகம் திருடப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்த மேலூர் டி.எஸ்.பி.க்கு, ஊரகக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

News image
Updated On :9 ஜூலை 2018, 8:34 pm

DIN

மதுரையில் ரத்த தானம் அளிக்கச் சென்ற இளைஞரிடம் சிறுநீரகம் திருடப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்த மேலூர் டி.எஸ்.பி.க்கு, ஊரகக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை ஒத்தக்கடை சுதந்திரா நகரைச் சேர்ந்த ஷகிலா மகன் முகம்மது பக்ருதீன் (18). ஸ்டுடியோ ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். 
இந்நிலையில் மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டியில் வசித்து வரும் உறவினரான ராஜாமுகமதுவின் மகன் அசாருதீனுக்கு ரத்தம் தேவைப்படுவதாக, ராஜாமுகமதுவும் மற்றொரு உறவினர் பஷீர் அகமதுவும் சேர்ந்து பக்ருதீனிடம் கூறியுள்ளனர். 
இதையடுத்து அசாருதீனுக்கு ரத்தம் கொடுப்பதற்காக முகமது பக்ருதீன், மதுரை வளர்நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்றுள்ளார். மருத்துவமனையில் பக்ருதீனிடம் ரத்த தானம் செய்வதற்கான விண்ணப்பத்தில் கையொப்பம் பெற்றுக்கொண்டு அவரை ஒரு மாதம் மருத்துவமனையில் தங்க வைத்துள்ளனர். இதில், பக்ருதீனின் இடது சிறுநீரகத்தை எடுத்து அசாருதீனுக்கு பொருத்தியுள்ளனர். ஒரு மாதத்துக்கு பின்னர் வீடு திரும்பிய பக்ருதீன் நடக்க முடியாமல், உடல் சோர்வான நிலையில் காணப்பட்டுள்ளார். அதையடுத்து குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தனர்.
அப்போது பக்ருதீனின் சிறுநீரகம் எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ராஜாமுகமதுவிடம் பக்ருதீன் குடும்பத்தினர் கேட்டதற்கு அவர் கொலை மிரட்டல் விடுத்தாராம். மேலும், தனியார் மருத்துவமனை நிர்வாகமும் மிரட்டல் விடுத்ததாம்.
இதுதொடர்பாக பக்ருதீனின் தாயார் ஷகிலா, மேலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்கின்றனர். இதையடுத்து மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணனிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு மேலூர் டிஎஸ்பிக்கு ஊரகக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.