திருச்சி: மேட்டூர் அணையின் நீர்மட்டம் விரைவில் 90 அடியை எட்டும் நிலையில் இருப்பதால், திருச்சி மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடிக்கான பணிகளை மகிழ்ச்சியோடு தொடங்கியுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கி நடந்து வருவதாக வேளாண் துறை அறிவித்துள்ளது.
இதே போல இந்த ஆண்டு வாழைத்தோட்டங்களும் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து 17 கால்வாய்களிலும் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். அப்போதுதான் கடைமடைப் பகுதிகளுக்கும் தண்ணீர் கிடைக்கும் என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.
கடந்த ஆண்டு பருவ மழையும் பொய்த்து, காவிரியிலும் தண்ணீர் வராததால் சம்பா சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால், விவசாயத்துக்கு போதுமான தண்ணீர் திறந்துவிடப்படும் என்பதால் சம்பா சாகுபடியை மிக உற்சாகத்தோடு துவக்கியிருப்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

25.4.1976: சட்டம் வந்தபின் ஆட்குறைப்பு, “லே - ஆப்" இல்லை: மந்திரி தகவல்

வன விலங்குகளை தொந்தரவு செய்தால் நடவடிக்கை: வனத் துறை எச்சரிக்கை

சிறுமியின் 7 மாத கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி

கிழக்கு இந்தியா முழுவதும் அடுத்த மாதம் பாஜக அரசுகள் - அமித் ஷா
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

