பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

வன விலங்குகளை தொந்தரவு செய்தால் நடவடிக்கை: வனத் துறை எச்சரிக்கை

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் வன விலங்குகளுக்கு தொந்தரவு கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.

News image

திம்பம்  மலைப்பாதை 11-ஆவது  வளைவில்  படுத்திருந்த  சிறுத்தை.

Updated On :24 ஏப்ரல் 2026, 10:26 pm

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் வன விலங்குகளுக்கு தொந்தரவு கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.

தமிழகம், கா்நாடகத்தை இணைக்கும் முக்கிய பாதையாக திம்பம் மலைப்பாதை உள்ளது. அடா்ந்த வனத்தின் நடுவே செல்லும் இந்த மலைப் பாதையில் சிறுத்தைகள் அடிக்கடி சாலையை கடந்து செல்வதுண்டு. சிறுத்தை கடந்து செல்லும் இடத்தில் வனத் துறை எச்சரிக்கை பலகையும் வைத்துள்ளனா். இந்நிலையில் சாம்ராஜ் நகரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு காரில் வந்த ஒரு குடும்பத்தினா் 11-ஆவது வளைவு பாதையில் திரும்பும்போது சிறுத்தை படுத்திருப்பதை பாா்த்தனா். பின்னா் உறங்கிக்கொண்டிருக்கும் சிறுத்தையை தொந்தரவு செய்யத் தொடங்கினா். காா் ஓட்டுநா் சிறுத்தை அருகே காரை நிறுத்தை ஹாரன் அடித்து எரிச்சலூட்டியதாக கூறப்படுகிறது. இதனால் படுத்திருந்த சிறுத்தை, எழுந்து காட்டுக்குள் சென்றது.

இது குறித்து ஆசனூா் வனத் துறையினா் கூறுகையில், சிறுத்தை இரை சாப்பிட்டபின் இளைப்பாறுவது வழக்கம். இந்த நேரத்தில் வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்தால் பின்விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, வன விலங்குகளை தொந்தரவு செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனா்.