மதுரை: வீட்டு வாடகை தொடர்பான வழக்குகளை பழைய வாடகை கட்டுப்பாட்டுச் சட்டத்தின்படியே வழக்குகளைத் தொடுக்கலாம் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவித்துள்ளது.
வீட்டு வாடகை தொடர்பான நான்கு வழக்குகளை மாவட்ட வாடகை கட்டுப்பாட்டு அலுவலகம் விசாரிக்காமல் திருப்பி அனுப்பியது தொடர்பான வழக்கு ஒன்று, மதுரை உயர் நீதிமன்றத் கிளையில் வியாழன் அன்று விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது வீட்டு வாடகை கட்டுப்பாடு தொடர்பாக புதிய சட்டமானது விரைவில் நடைமுறைக்கு வரவிருப்பதால், அதற்கு முன்னர் இந்த வழக்குகளை விசாரிக்க முடியாது என்று மாவட்ட வாடகை கட்டுப்பாட்டு அலுவலகத்தின் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அப்பொழுது நீதிபதிகள் கூறியதாவது:
வீட்டு வாடகை தொடர்பான நான்கு வழக்குகளை மாவட்ட வாடகை கட்டுப்பாட்டு அலுவலகம் விசாரிக்காமல் திருப்பி அனுப்பியது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
புதிய சட்டம் அமலுக்கு வரும் வரை வீட்டு வாடகை தொடர்பான வழக்குகளை பழைய வாடகை கட்டுப்பாட்டுச் சட்டத்தின்படியே வழக்குகளைத் தொடுக்கலாம்.
இது தொடர்பாக மாநில பதிவுத்துறை அலுவலகமானது மாவட்ட வாடகை கட்டுப்பாட்டு அலுவலகங்களுக்கு சுற்றரிக்கை அனுப்ப வேண்டும்.
மாவட்ட வாடகை கட்டுப்பாட்டு அலுவலகங்கள் மற்றும் வாடகை கட்டுப்பாட்டுத் தீர்ப்பாயம் ஆகியவை இது தொடர்பான வழக்குகளை விசாரிக்கலாம்.
இவ்வாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


