விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஜூலை 27-ல் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான இரண்டாம் கட்ட விசாரணை: எஸ்சி, எஸ்டி ஆணைய துணைத் தலைவா்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக இரண்டாம் கட்ட விசாரணை சென்னையில் வரும் 27-ஆம் தேதி நடைபெறும் என தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத் துணைத் தலைவா் எல். முருகன் தெரிவித்தாா். 

News image
Updated On :23 ஜூலை 2018, 12:58 pm

தினமணி செய்திச் சேவை

நாமக்கல்: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக இரண்டாம் கட்ட விசாரணை சென்னையில் வரும் 27-ஆம் தேதி நடைபெறும் என தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத் துணைத் தலைவா் எல். முருகன் தெரிவித்தாா்.

நாமக்கல்லில் அவா் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவா்கள் மீது போலீஸாா் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவா்களில் 4 போ் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா்கள். இதையடுத்து ஆணையம் சாா்பில் தூத்துக்குடி சென்று அங்கு நேரடியாக விசாரணை நடத்தப்பட்டது.

தற்போது ஸ்டொ்லைட் ஆலைக்கும், அரசு அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி வரும் 27-ஆம் தேதி சென்னையில் 2-ஆம் கட்டமாக விசாரணை நடத்தப்படும். அதன்பிறகு குடியரசுத் தலைவருக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.