ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

போக்குவரத்துக் காவல்துறையால் போதிய தண்ணீரின்றி புறப்படும் விரைவு ரயில்கள்

சென்னை நகரத்துக்குள் காலை 8 மணியில் இருந்து மதியம் வரை குடிநீர் லாரிகள் நுழையக் கூடாது என்ற போக்குவரத்துக் காவல்துறையின் அதிரடி உத்தரவால் சில விரைவு ரயில்கள் போதிய நீர் வசதி இன்றி புறப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :23 ஜூலை 2018, 3:44 pm IST

சென்னை: சென்னை நகரத்துக்குள் காலை 8 மணியில் இருந்து மதியம் வரை குடிநீர் லாரிகள் நுழையக் கூடாது என்ற போக்குவரத்துக் காவல்துறையின் அதிரடி உத்தரவால் சில விரைவு ரயில்கள் போதிய நீர் வசதி இன்றி புறப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 10 நாட்களாக, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் 11 விரைவு ரயில்கள் போதிய நீர் இன்றி அல்லது ஒரு சொட்டுத் தண்ணீரும் இல்லாமல் புறப்படுகின்றன.

கன்னியாகுமரி - ஹஸ்ரத் நிஜாமுதீன் திருக்குறள் விரைவு ரயில், மதுரை - ஹஸரத் நிஜாமுதீன் சம்பர்க் கிரந்தி விரைவு ரயில், வைகை விரைவு ரயில், பல்லவன் விரைவு ரயில் போன்றவற்றில் கழிவறையைப் பயன்படுத்தக் கூட தண்ணீர் இல்லாமல் பயணிகள் அவதிப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.