இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதி கலன் குழாய் பழுது: 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு 

வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில், ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

Updated On :24 ஜூலை 2018, 2:28 am IST

வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில், ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
வடசென்னை அனல் மின் நிலையத்தில் முதல் நிலையில் உள்ள 3அலகுகளில் தலா 210 மெகாவாட்,, இரண்டாம் நிலையில் உள்ள 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆக மொத்தம் வடசென்னை அனல் மின் நிலையத்தில் உள்ள 2 நிலைகளில் மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 
இந்நிலையில், இங்குள்ள 2-ஆவது நிலையில் இருக்கும் முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதில், ஏற்கெனவே பராமரிப்பு பணி காரணமாக 1-ஆவது நிலையில் உள்ள 2-ஆவது அலகில் 210மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், மொத்தம் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கொதி கலன் குழாயில் ஏற்பட்டுள்ள பழுதை சீரமைக்கும் பணியில் மின் நிலைய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.