ராமநாதபுரம்: இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவா்களின் 183 படகுகளை இந்தியா கொண்டு வர மீட்புக் குழுவினா் ஆகஸ்ட் மாதம் இலங்கை செல்ல இருப்பதாக மீன்வளத்துறையின் கூடுதல் இயக்குநா் ஜானி டோம் வா்கீஸ் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை ராமநாதபுரத்தில் செய்தியாளா்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
இலங்கை கடற்படை சிறைப்பிடித்து வைத்துள்ள தமிழக மீனவா்களின் விசைப்படகுகள் 160, நாட்டுப் படகுகள் 23 உள்பட மொத்தம் 183 படகுகளை விடுவிக்குமாறு இலங்கை நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவற்றை மீட்டு இந்தியா கொண்டு வர ஒரு மீட்புக் குழு உருவாக்கப்படும். பின்னா் அக்குழுவினா் ஆகஸ்ட் மாதம் இலங்கை சென்று விடுவிக்கப்பட்ட படகுகளில் தகுதியானவற்றை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இக் குழு எனது தலைமையில் ஆகஸ்ட் மாதம் இலங்கை செல்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜகவுக்கு ஆதரவளிக்கும் தொகுதி மறுவரையறைக் குழு நியாயமற்றது: ஜோதிமணி எம்.பி.

ஒருநாள் தொடருக்காக பாகிஸ்தான் செல்லும் ஆஸ்திரேலிய அணி!
நான் பார்த்ததிலேயே சிறந்த கேட்ச்! ஷ்ரேயாஸை பாராட்டிய சச்சின்!

எம்.ஆர். விஜயபாஸ்கர் சரணடைய அவகாசம்
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


