மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சென்னை உயர் நீதிமன்றத்தின் ஏழு புதிய நீதிபதிகள் பதவியேற்பு 

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஏழு புதிய நீதிபதிகள் திங்களன்று பதவியேற்றுக் கொண்டனர். 

News image
Updated On :4 ஜூன் 2018, 10:39 am

DIN

சென்னை:  சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஏழு புதிய நீதிபதிகள் திங்களன்று பதவியேற்றுக் கொண்டனர்.  .

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஏழு புதிய நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு கடந்த 1-ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இவர்களில் நிர்மல் குமார், ஆஷா, சுப்ரமணிய பிரசாத், ஆனந்த் வெங்கடேசன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகிய ஐந்து பேரும் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதே சமயம் சரவணனை மற்றும் இளந்திரையன் ஆகிய இருவரும் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட ஏழு புதிய நீதிபதிகள் திங்களன்று பதவியேற்றுக் கொண்டனர்.  .

சென்னை உயர் நீதிமன்ற அரங்கில் திங்கள் காலை எளிமையாக நடைபெற்ற விழாவில் அவர்கள்  அனைவருக்கும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.