தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: இன்று பிற்பகல் விசாரணை தொடங்குகிறார் அருணா ஜெகதீசன்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் இன்று பிற்பகல் விசாரணையை தொடங்குகிறார்.

News image
Updated On :4 ஜூன் 2018, 6:23 am

DIN

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த மக்கள் போராட்டத்தில் காவல்துறையால் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இவர், இந்த விசாரணையை இன்று (திங்கள்கிழமை) தொடங்க இருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி அருணா ஜெகதீசன் இன்று தூத்துக்குடி சென்றடைந்தார். அவர், முதலில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்தார். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.  

இந்த விவகாரம் குறித்தான விசாரணையை அருணா ஜெகதீசன் இன்று பிற்பகல் தொடங்க இருக்கிறார். இவர் முதற்கட்டமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு

ள்ள துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து விசாரணையை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 

இந்த விசாரணை 2 மாத காலத்துக்குள் நிறைவடைந்து, அந்த அறிக்கை தமிழக அரசிடம் சமர்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.