சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

துரைமுருகன் இளமையின் ரகசியம் என்ன? பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்திய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

துரைமுருகன் இளமையின் ரகசியம் என்ன? என்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கேள்வியால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

News image
Updated On :7 ஜூன் 2018, 3:14 pm IST

துரைமுருகன் இளமையின் ரகசியம் என்ன? என்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கேள்வியால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.  

சட்டப் பேரவையில் இன்று தொழில் துறை, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்றைய விவாதத்தின்போது கேவி குப்பம் அதிமுக எம்எல்ஏ லோகநாதன் புதிய வட்டம் தொடர்பாக வருவாய்த் துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் உதயகுமார், ஏற்கெனவே அம்மாவின் அரசு 72 வட்டத்தை ஏற்படுத்தி உள்ளது என்றார். 

அப்போது குறுகிட்ட திமுகவின் துரைமுருகன் 73ஆவது வட்டத்தை அம்மாவின் அரசு ஏற்படுத்த வேண்டும் என்றார். உடனே குறுக்கிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அம்மா என கூறியதற்கு நன்றி என்றார். இதற்கு பதிலளித்த துரைமுருகன் வட்டத்தை ஏற்படுத்தினால் எவ்வளவு வேண்டுமானாலும் புகழ்கிறேன் என்றார். 

உடனே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்று துரைமுருகன் கலர்புல்லாக இருக்கிறார், என்றும் 16 ஆக உள்ளார். உங்கள் இளமையின் ரகசியம் என்ன? என்றார். துணை முதல்வரின் இந்த கேள்வியால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.