பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

கபினியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதற்கு குமாரசாமிக்கு கமல் நன்றி 

கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் நன்றி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :15 ஜூன் 2018, 3:26 pm

சென்னை: கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் நன்றி தெரிவித்துள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக கர்நாடக முதல்வர் குமாரசாமி வெள்ளியன்று மாலை மதுரை வந்திருந்தார். சுவாமி தரிசனத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

கடவுளின் கருணையால் நல்ல மழை பெய்து வருகிறது. எனவே இரு மாநிலங்களும் இடையே நீரை பங்கிடுவதில் பிரச்சனை இருக்காது. அதனால் கடவுளின் அருளால் இம்முறை தமிழகத்திற்கு நீர் திறப்பதில் பிரச்னை இருக்காது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

கர்நாடக முதல்வரிடம் பேசினேன். கபினி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதற்கு எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டேன். தற்பொழுது காவிரி மேலாண்மை ஆணையம் செயல்படத் தொடங்கிய பிறகு, இரு மாநில நல்லுறவால் அடைக்கப்பட்டிருக்கும் பல கதவுகள் திறக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.