சிறுவாணி அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, கோவை குற்றாலம் அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினர் செவ்வாய்க்கிழமை தடை விதித்தனர்.
கோவை கோட்டம், போளுவாம்பட்டி வனச் சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது கோவை குற்றாலம் அருவி. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சிறுவாணி அணைப் பகுதியில் மழை பெய்யும்போது அருவியில் நீர்வரத்து அதிகரிக்கும். அவ்வாறு நீர்வரத்து அதிகரிக்கும்போது சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அங்கு செல்ல வனத் துறையினர் தடை விதிப்பது வழக்கம்.
கடந்த சில நாள்களாக சிறுவாணி அணைப் பகுதியில் பெய்த மழையால் ஜூன் 11-ஆம் தேதி முதல் ஜூன் 20-ஆம் தேதி வரை கோவை குற்றாலம் அருவிக்குச் செல்ல வனத் துறையினர் தடை விதித்திருந்தனர்.
மழை குறைந்ததால் ஜூன் 21ஆம் தேதிமுதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனிடையே, திங்கள்கிழமை இரவு பெய்த மழையால் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே, கோவை குற்றாலம் அருவிக்குச் செல்ல செவ்வாய்க்கிழமை வனத் துறையினர் மீண்டும் தடை விதித்தனர். மழையின் அளவு குறைந்தால் மட்டுமே புதன்கிழமை அனுமதி வழங்கப்படும் என்று வனத் துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








