அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: தடயங்கள் சேகரிப்புப் பணியை நிறைவு செய்தது சிபிசிஐடி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, கலவரம் தொடர்பாக தடயங்கள் சேகரிப்புப் பணியில் ஈடுபட்ட சிபிசிஐடி பிரிவு போலீஸார் அந்தப் பணியை செவ்வாய்க்கிழமை நிறைவு செய்தனர்.

News image

தூத்துக்குடியில் பாளையங்கோட்டை சாலை பகுதியில் செவ்வாய்க்கிழமை தடயங்கள் சேகரிப்புப் பணியில் ஈடுபட்ட சிபிசிஐடி பிரிவு போலீஸார்

Updated On :27 ஜூன் 2018, 2:08 am IST

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, கலவரம் தொடர்பாக தடயங்கள் சேகரிப்புப் பணியில் ஈடுபட்ட சிபிசிஐடி பிரிவு போலீஸார் அந்தப் பணியை செவ்வாய்க்கிழமை நிறைவு செய்தனர். தொடர்ந்து, துப்பாக்கிச்சூட்டின்போது போலீஸார் பயன்படுத்திய ஆயுதங்கள் புதன்கிழமை (ஜூன் 27) சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
தூத்துக்குடியில் கடந்த மாதம் 22 மற்றும் 23 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், அரசு மற்றும் தனியார் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பெட்ரோல் குண்டு வீசப்பட்டு பல இடங்களில் வன்முறை நிகழ்ந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக 5 பிரிவுகளாக வழக்குப் பதிந்த சிபிசிஐடி பிரிவு போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிபிசிஐடி பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் மாரிராஜன் தலைமையில் கடந்த நான்கு நாள்களாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் தடயங்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
வன்முறை நிகழ்ந்த விவிடி சிக்னல், அண்ணாநகர், பாளையங்கோட்டை சாலை, ஆட்சியர் அலுவலகம், ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்பு, திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சிபிசிஐடி பிரிவு போலீஸார் தடயங்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு நான்காவது நாளான செவ்வாய்க்கிழமை நிறைவு செய்தனர்.
மேலும், சம்பவம் நடைபெற்று ஒரு மாதங்கள் நிறைவடைந்துவிட்டதால் சம்பவத்தன்று மாநகராட்சி நிர்வாகத்தால் சேகரிக்கப்பட்டு தருவைகுளம் பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளிலும் சிபிசிஐடி பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர்.
தற்போது தடயங்கள் சேகரிப்புப் பணி முடிவடைந்த நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது போலீஸார் பயன்படுத்திய ஆயுதங்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சிபிசிஐடி பிரிவு போலீஸார் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, ஆயுதங்களை போலீஸார் புதன்கிழமை (ஜூன் 27) ஒப்படைக்க உள்ளனர். தொடர்ந்து அடுத்தகட்ட விசாரணையை தொடங்க உள்ளதாக சிபிசிஐடி பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.