கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! கரூர் பலி: தற்காலிக அரசுப் பணி ஆணையே வழங்க வேண்டும்! மதுரை அமர்வு உத்தரவுஇதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்திருச்சியில் இருந்து கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு! இன்றைய நிலவரம்அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
/

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: தடயங்கள் சேகரிப்புப் பணியை நிறைவு செய்தது சிபிசிஐடி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, கலவரம் தொடர்பாக தடயங்கள் சேகரிப்புப் பணியில் ஈடுபட்ட சிபிசிஐடி பிரிவு போலீஸார் அந்தப் பணியை செவ்வாய்க்கிழமை நிறைவு செய்தனர்.

News image

தூத்துக்குடியில் பாளையங்கோட்டை சாலை பகுதியில் செவ்வாய்க்கிழமை தடயங்கள் சேகரிப்புப் பணியில் ஈடுபட்ட சிபிசிஐடி பிரிவு போலீஸார்

Updated On :27 ஜூன் 2018, 2:08 am IST

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, கலவரம் தொடர்பாக தடயங்கள் சேகரிப்புப் பணியில் ஈடுபட்ட சிபிசிஐடி பிரிவு போலீஸார் அந்தப் பணியை செவ்வாய்க்கிழமை நிறைவு செய்தனர். தொடர்ந்து, துப்பாக்கிச்சூட்டின்போது போலீஸார் பயன்படுத்திய ஆயுதங்கள் புதன்கிழமை (ஜூன் 27) சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
தூத்துக்குடியில் கடந்த மாதம் 22 மற்றும் 23 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், அரசு மற்றும் தனியார் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பெட்ரோல் குண்டு வீசப்பட்டு பல இடங்களில் வன்முறை நிகழ்ந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக 5 பிரிவுகளாக வழக்குப் பதிந்த சிபிசிஐடி பிரிவு போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிபிசிஐடி பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் மாரிராஜன் தலைமையில் கடந்த நான்கு நாள்களாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் தடயங்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
வன்முறை நிகழ்ந்த விவிடி சிக்னல், அண்ணாநகர், பாளையங்கோட்டை சாலை, ஆட்சியர் அலுவலகம், ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்பு, திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சிபிசிஐடி பிரிவு போலீஸார் தடயங்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு நான்காவது நாளான செவ்வாய்க்கிழமை நிறைவு செய்தனர்.
மேலும், சம்பவம் நடைபெற்று ஒரு மாதங்கள் நிறைவடைந்துவிட்டதால் சம்பவத்தன்று மாநகராட்சி நிர்வாகத்தால் சேகரிக்கப்பட்டு தருவைகுளம் பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளிலும் சிபிசிஐடி பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர்.
தற்போது தடயங்கள் சேகரிப்புப் பணி முடிவடைந்த நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது போலீஸார் பயன்படுத்திய ஆயுதங்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சிபிசிஐடி பிரிவு போலீஸார் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, ஆயுதங்களை போலீஸார் புதன்கிழமை (ஜூன் 27) ஒப்படைக்க உள்ளனர். தொடர்ந்து அடுத்தகட்ட விசாரணையை தொடங்க உள்ளதாக சிபிசிஐடி பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.