சந்தனமரக் கடத்தல் வீரப்பனின் சகோதரர் மாதையனுக்கு உடல்நலக் குறைவு 

சந்தன மரக்கடத்தல் மன்னன் வீரப்பனின் சகோதரர் மாதையனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Updated on
1 min read

கோவை: சந்தன மரக்கடத்தல் மன்னன் வீரப்பனின் சகோதரர் மாதையனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுட்டுக் கொல்லப்பட்ட வீரப்பனின் கூட்டாளியாக இருந்த மாதையன், 25 ஆண்டுகளுக்கு முன்பு சத்தியமங்கலத்தில்  வனத்துறை அதிகாரியை கொலை செய்த குற்றத்துக்காக 1997ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

71 வயதாகும் மாதையனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com