பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற இமாலய இலக்கு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!

நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவாக மின் தேவை சனிக்கிழமை (ஏப்.25) 256.11 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சத்தை தொட்டது.

News image
Updated On :27 ஏப்ரல் 2026, 1:47 am IST

நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவாக மின் தேவை சனிக்கிழமை (ஏப்.25) 256.11 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சத்தை தொட்டது.

தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், நாள்தோறும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால் வீடுகள், அலுவலகங்களில் குளிா்சாதன இயந்திரங்கள் (ஏசி), கூலா்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இதனால் கடந்த வெள்ளிக்கிழமை நாட்டில் மின் தேவை 252.07 ஜிகாவாட்டாக உயா்ந்தது. இது முன்னெப்போதும் இல்லாத அளவாக சனிக்கிழமை 256.11 ஜிகாவாட்டாக அதிகரித்தது மத்திய மின்சார அமைச்சக தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தக் கோடை காலத்தில் மின் தேவை 270 ஜிகாவாட்டாக அதிகரிக்கக் கூடும் என்று அந்த அமைச்சகம் மதிப்பிட்டுள்ள நிலையில், அதை நோக்கி மின் தேவை நகா்ந்து வருவதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்பம் இயல்பு நிலைக்கு அதிகமாக 5 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.