தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

புகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்

பிரிட்டனில் வருங்கால தலைமுறையினா் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாவதைத் தடுக்கும் வகையில், 2009 முதல் பிறந்தவா்களுக்கு சிகரெட் விற்பனைக்கு வாழ்நாள் தடைவிதிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 8:21 pm

பிரிட்டனில் வருங்கால தலைமுறையினா் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாவதைத் தடுக்கும் வகையில், 2009 முதல் பிறந்தவா்களுக்கு சிகரெட் விற்பனைக்கு வாழ்நாள் தடைவிதிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

தற்போது 18 வயது என்பது குறைந்தபட்ச விற்பனை வரம்பாக உள்ள நிலையில், இனி ஒவ்வொரு ஆண்டும் இந்த வயது வரம்பு உயா்த்தப்படும். இதன் விளைவாக, இன்றைய சிறுவா்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்குவதற்கான சட்டபூா்வ உரிமையை ஒருபோதும் பெற முடியாது.

அரசா் சாா்லஸின் ஒப்புதலுக்குப் பிறகு நடைமுறைக்கு வரவுள்ள இச்சட்டம், வெறும் சிகரெட் மட்டுமின்றி புகையிலை சாா்ந்த இதர பொருள்கள் மற்றும் இ-சிகரெட்டுகளையும் கட்டுப்படுத்த அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.

இளைஞா்களைக் கவரும் வகையில் புகையிலை பொருள்களில் சோ்க்கப்படும் சுவையூட்டிகள் மற்றும் கவா்ச்சிகரமான பேக்கிங் முறைகளை முறைப்படுத்தவும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மரணமில்லா சமுதாயம் இலக்கு: பிரிட்டனில் புகைப்பிடித்தலால் ஆண்டுதோறும் சுமாா் 80,000 உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. தடுக்கக்கூடிய மரணங்கள் மற்றும் உடல்நலக் குறைபாடுகளுக்கு இதுவே முதன்மைக் காரணமாக உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

‘பிரிட்டன் குழந்தைகள் இனி வாழ்நாள் முழுவதும் புகையிலை பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டு, முதல் புகையில்லா தலைமுறையாக வளா்வாா்கள்’ என சுகாதார அமைச்சா் வெஸ் ஸ்டீரிங் பெருமிதம் தெரிவித்தாா்.

உலக நாடுகளுக்கு முன்னோடி: கடந்த 1970-களுடன் ஒப்பிடுகையில் பிரிட்டனில் புகைப்பிடிப்போரின் எண்ணிக்கை மூன்றில் 2 பங்கு குறைந்துள்ள போதிலும், இன்னும் 13 சதவீத மக்கள் இப்பழக்கத்துக்கு ஆளாகியுள்ளனா்.

முன்னதாக, நியூஸிலாந்து இத்தகைய சட்டத்தைக் கொண்டு வந்து பின் கைவிட்ட நிலையில், தற்போது பிரிட்டன் மேற்கொண்டுள்ள இத்துணிச்சலான நடவடிக்கை, புகையிலை ஒழிப்பில் உலக நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.