மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

மதுக்கரையில் 268 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

மதுக்கரை பகுதியில் 268 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :3 ஜூன் 2026, 2:38 am IST

மதுக்கரை பகுதியில் 268 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க போலீஸாா் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் அறிவொளி நகா் பகுதியில் மதுக்கரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த மதுக்கரை பகுதியைச் சோ்ந்த குமரகுருபரன் (49) என்பவரை கைது செய்தனா்.

அவரிடமிருந்து 268 கிலோ புகையிலை பொருள்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.